Monday 9 July 2012

                                            அவளின் மௌனம்

பின்லேடனை பின் தங்கவைத்த வன்முறைக்காரியே...
தினம் தினம் மௌனம் எனும் கத்தியால் என்னை கிழிக்கின்றாய் !!!
மனக்கோட்டையில் ராஜாவாக வாழ்கிறேன் ...
காத்திருக்கிறேன் கோட்டையில் என் ராணி உன் பிரவேசத்திற்காக...!!!
புரியாத மழலையிடம் மழைவெள்ளம் போல் பேசுகிறாய்...
உன் பார்வைதனில் பிறவிப்பயன்  எய்தும் இந்த மழலைக்கு உன் கடைக்கண் பார்வை கூடக்கிடையாதா...!!!
     புத்தனுக்கு போதி மரம்......
     இந்தப் பித்தனுக்கு ஏது மரம்..!!!!
முனிவரின் தவத்தையும் கலைக்க வழி இருக்க, வழி இல்லையோ என்னவளின் மௌனத்தைக் கலைக்க !!!!
மனித நேயம் இல்லாத மாதவியே..............
பயிற்சி பெறாமல் தேர்ச்சிப் பெற்ற நடிகை நீ.......
உன் கையில் என் உயிர் இருப்பது தெரிந்தும் இன்னும் உன் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறாய்......
ஏக்கத்தினும் ஒரு சுகம் உள்ளது....
காத்திருக்கிறேன் அச்சுகத்தோடு....
உன் மௌனத்தைக் கலைத்து, என் ஏக்கத்தைத் தணித்து , உயிரற்றவனான என்னை உயிர்ப்பித்துவிடு என்னவளே !!!!!!!!!!!
                           நா.ஸ்ரீதர்

1 comment:

  1. Hei superb da.u hv great stuff man..carry on...proud to be Ur sis..

    ReplyDelete