Sunday 2 September 2012

மன அமைதி

                         
 வாழ்கையின் அனைத்து பரிமாணங்களிலும் மனிதனை வழிநடத்திச் செல்லும் அகல்விளக்கு வெளிச்சம் தான் மனம்...!!!
மாய உலகை தன் திரையில் படமாக்கி மெய்யாக்க விரும்பும் வினோதமான விலங்கினம் மனம்...!!!
காதலில் மாயம்,அன்பில் மாயம், நட்பில் மாயம், உறவில் மாயம், வெற்றியில் மாயம், தோல்வியில் மாயம்...அனைத்திலும் மாயம்......!!!
ஆத்திகத்தை ஆதரிப்பதா...இல்லை நாத்திகத்தை நாடுவதா.....
ஆத்திகத்தை ஆதரிக்க ஆதாரம் இல்லை....
நாத்திகத்தை நாடுவதில் நன்மை இல்லை...!!!!!
அடுத்த நொடி, அடுத்த நிமிடம்,அடுத்த நாள் அனைத்தும் மாயம்......!!!
என் பாதச் சுவடுகளை பதித்துக் கொண்டிருக்கும் வாழ்கையின் வழித்தடமும் ஒரு மாயமே...!!!
இப்படி மாயங்களின் சேர்க்கையால் சலனத்தின் உச்சத்தில் உள்ளது மனம்...
அந்த மனத்தின் அமைதியை நோக்கி நானும் சென்று கொண்டுள்ளேன்.....!!!!!!!!

                                                   நா.ஸ்ரீதர்..

No comments:

Post a Comment