Friday 21 June 2013

முதியோர் இல்லம்


நாகரிக வளர்ச்சியின் எடுத்துக்காட்டாய் வளர்ந்து கொண்டிருக்கிறது முதியோர் இல்லங்கள்.....

நரைமுடி சேர்க்கையும், ரத்த நாளங்களின் சோர்வும், இயலாமையின் உச்சகட்டமும் ஒருசேர திணிக்கின்றது மனிதனிடம் முதுமையை !!!
தன் சக்தியினால் உருவான வாரிசுகளிடம் கையேந்தி நிற்கிறது வாழ்க்கையை கறையேறும் சக்திக்காக....!!
கைத்தடியின் பிடியில் உள்ள கைகள் விழைகின்றது பேரனின் கைகளுக்காக.....மூக்குக் கண்ணாடியினைத் தேடும் கைகள் விழைகின்றது அவை பேத்தியின் கைகளினால் கிட்டாதா என்று....!!

பொங்கும் பானைகளினாலோ, சிரிக்கும் மத்தாப்புக்களினாலோ ஈடு செய்ய முடியுமா சதை சுருங்கிய சருமங்களினால் செய்யும் ஆசீர்வாதங்களை..!!
வாழ்ந்து முடித்த அநாதைகளின் சேர்ப்பிடமே முதியோர் இல்லங்கள்...யாரும் இல்லாத அனாதைகளை விட அனைவரும் இருந்தும் அநாதைகளாக திரிக்கப்பட்டுள்ளோரின் நெஞ்சக் குமுறல்களை வடிக்க சொற்கள் இல்லை எம்மொழியிலும்...!!!!
வாழ்க்கையின் கடைசி பக்கங்களை புரட்டிக் கொண்டிருக்கின்றனர்...பொன் சொற்களினால் அவை பொறிக்கப்படாவிடினும்,
கண்ணீர் சொற்களினால் அவை பொறிக்கப்படாமல் இருப்பின்..
சில சகாப்தங்கள் சற்றே மகிழ்ச்சியுடன் நிறைவடையும் !!!!!!!!!!!!

                                                 -- நா. ஸ்ரீதர்...



No comments:

Post a Comment